Posts

Showing posts from June, 2024
 "விசித்தர வேண்டுகோள்" (பக்தனின் வேண்டுகோளை ஏற்று விமானம் மூலம் பிரசாதம் அனுப்பிய பெரியவா) சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு தொகுதவர்-கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன். சாத்தனூர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்பவர் ஏராளமான நிலபுலன்களுடைய பக்தர்.  கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்,முதன் முதலாகப் பெரியவா தரிசனத்துக்கு வந்தார். என்ன தோன்றிற்றோ,அவருக்கு ?பெரியவாளிடம் ஒரு விசித்தரமான வேண்டுகோளை விண்ணப்பித்துக்கொண்டார்.  "நான் கடைசி மூச்சு விட்டதும், பெரியவாள் 'கங்கா ஜலமும்,துளசிதளமும்' பிரசாதமாக கொடுத்தனுப்பி அந்தச் சரீரத்தையும் ஆத்மாவையு ம் சுத்தப்படுத்தி, நல்ல கதி கிடைக்க அனுக்ரஹம் செய்யணும்..."  இந்தப் பிரார்த்தனையைப் பெரியவாளைத் தவிர வேறு யாரும் கேட்கவில்லை.சாத்தனூர் அய்யர்வாளும் மற்றவர்களிடம் சொன்னதில்லை. மஹாராஷ்டிர மாநிலம் சதாராவில் ஸ்ரீ மடம் முகாம் செய்திருந்தபோது, தொலை பேசியில் செய்தி வந்தது. சாத்தனூர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் சற்றுமுன் சிவலோகப் பிராப்தி அடைந்தார். உரிய சந்தர்ப்பத்தில் பெரியவாளிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.  பெரியவா ஒரு நிமிஷம் மௌனமாக இர...
 சங்கராம்ருதம் - 883 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்   நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் பெரியவரைத் தரிசிக்க தஞ்சாவூரில் இருந்து காஞ்சி மடத்திற்கு 65 வயது முதியவரும், அவரது மனைவியும் வந்தனர். பெரியவரிடம் மூதாட்டி "பெரியவா.... எங்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவன் டில்லியில வேலை பாக்குறான். இளையவன் கான்பூரில நல்ல வேலையில இருக்கான். மருமகள்களும், குழந்தைகளும் எங்கள் மீது பாசமா இருக்காங்க. எங்களையும், அங்கே வரச் சொல்லி கூப்பிட்டாலும், இவர் பிடிவாதம் பிடிக்கிறார். கோபக்காரரான இவருக்கு முன்னால, நான் சுமங்கலியா போய்ச் சேர்ந்துடணும். இவரும் எந்த கஷ்டமும் பட்டுடக் கூடாது'' என்று சொல்லி வருந்தினார் விஷயம் கேட்ட காஞ்சிப் பெரியவர், "நீ போயிட்டா இந்த கோபக்காரரை யார் பார்த்துப்பா'' என்று கேட்டார். மவுனமாக நின்ற இருவரிடமும், "ஒற்றுமையா இருங்கோ'' என்று சொல்லி பிரசாதமும் கொடுத்து வழியனுப்பினார். இருவரும் காமாட்சியம்மனை தரிசித்து விட்டு திரும்பினர். சிலநாட்கள் கழிந்ததும், முதியவர் பிள்ளைகளின் ஊருக்குச் சென்று தங்க சம்மதம் தெரிவித்தார். அதன்படி டில்லியிலு...