பெரியவா மகிமை
"ஓடுங்கடா! ஓடுங்கடா!" (ஒரு கிழவர் தடியும் கையுமாக திருடனைப் பார்த்து) ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்த விசுவநாதன் என்பவருக்கு பெரியவா எப்படி அருள் செய்தாரென்று பார்க்கலாம். மனைவியோடு ஊருக்குக் கிளம்புமுன் விசுவநாதன் பூஜை அறைக்கு வந்து பெரியவா படத்தை நமஸ்கரித்துவிட்டு, "ஊரில் திருட்டு பயம் அதிகமாகி இருக்கிறது: நீங்கதான் வீட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும்!" என்று வேண்டிக் கொண்டு கிளம்பிச் சென்றார். போன சில நாட்களில், வீட்டுப் பூட்டு உடைக்கப்பட்டு, பொருள்கள் திருட்டுப் போயின!' என்று கேள்விப்பட்டு பதறிக்கொண்டு வீடு திரும்பினார். பொருளெல்லாம் சிதறிக் கிடக்கும் அலங்கோலத்தைப் பார்த்து போலீஸை வரவழைத்தார். கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மெள்ள சுதாரித்துக் கொண்டு சிதறிக் கிடந்த பொருள்களை அதனதன் இடத்தில் வைத்துவிட்டு, எவையெல்லாம் காணவில்லை என்று பட்டியல் இட்டுப் பார்த்தால் எதுவுமே திருட்டுப் போகவில்லை என்று தெரிந்தது. ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. வீடோ ஒரே களேபரமாக இருக்கு. ஆனால் எந்த சாமானையும் திருடர்கள் எடுத்துச் செல்லவே இல்லையே! என்ன நடந்தது என்று திகைத்தார்கள். அந...