Posts

Showing posts from June, 2025

பெரியவா மகிமை

 "ஓடுங்கடா! ஓடுங்கடா!"  (ஒரு கிழவர் தடியும் கையுமாக திருடனைப் பார்த்து) ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்த விசுவநாதன் என்பவருக்கு பெரியவா எப்படி அருள் செய்தாரென்று பார்க்கலாம். மனைவியோடு ஊருக்குக் கிளம்புமுன் விசுவநாதன் பூஜை அறைக்கு வந்து பெரியவா படத்தை நமஸ்கரித்துவிட்டு, "ஊரில் திருட்டு பயம் அதிகமாகி இருக்கிறது: நீங்கதான் வீட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும்!" என்று வேண்டிக் கொண்டு கிளம்பிச் சென்றார். போன சில நாட்களில், வீட்டுப் பூட்டு உடைக்கப்பட்டு, பொருள்கள் திருட்டுப் போயின!' என்று கேள்விப்பட்டு பதறிக்கொண்டு வீடு திரும்பினார். பொருளெல்லாம் சிதறிக் கிடக்கும் அலங்கோலத்தைப் பார்த்து போலீஸை வரவழைத்தார். கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மெள்ள சுதாரித்துக் கொண்டு சிதறிக் கிடந்த பொருள்களை அதனதன் இடத்தில் வைத்துவிட்டு, எவையெல்லாம் காணவில்லை என்று பட்டியல் இட்டுப் பார்த்தால் எதுவுமே திருட்டுப் போகவில்லை என்று தெரிந்தது. ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. வீடோ ஒரே களேபரமாக இருக்கு. ஆனால் எந்த சாமானையும் திருடர்கள் எடுத்துச் செல்லவே இல்லையே! என்ன நடந்தது என்று திகைத்தார்கள். அந...

பெரியவா மகிமை

 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்      ஸ்ரீ மடத்தில் நித்ய கைங்கர்யம் செய்துவரும் ஸ்ரீ மஹாபெரியவாளின் பக்தரான ஒருவர் ஸ்ரீ கோபால கனபாடிகள் என்ற பக்தர்    அவர்தம் அனுபவத்தை கூறினார்.   ஸ்ரீ கோபால கனபாடிகள் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க சென்றபோது ஒரு வேதம் சம்பந்தமான பரிட்சை பற்றி ஸ்ரீ பெரியவாளிடம் பேச நேர்ந்துள்ளது. அப்பரிட்சையில் தேர்வானால் சஷ்டிஅப்தபூர்த்தி டிரஸ்ட் என்ற ஒரு அமைப்பிலிருந்து ஒரு ஊக்கக் தொகை கிடைக்கும் என்பதை ஸ்ரீ பெரியவாளிடம் தெரிவித்தபோது “என்ன சஷ்டிஅப்தபூர்த்தி டிரஸ்ட்டா?" என்று ஸ்ரீ பெரியவா தனக்கு அதைப்பற்றி அறியாதவர்போல் கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீ கோபால கனபாடிகள் தனக்கு தெரிந்த டிரஸ்ட் விபரங்களை கூறியுள்ளார். அதாவது தெய்வமாம் ஸ்ரீ மஹாபெரியவாளின் அறுபது வருட பொற்காலத்தை விமர்சையாக கொண்டாட பக்தர்கள் ஈடுபட்டபோது, முற்றும் துறந்த மாமுனிவர் அதை ஏற்காமல் தன் எளிமையை காட்டியுள்ளார். அந்த சமயம் திரண்ட நிதியை ஒரு நற்பணிக்காக பயன்படுத்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட டிரஸ்ட் டிற்கு “சஷ்டிஅப்தபூர்த்தி டிரஸ்ட்...

பெரியவா மகிமை

     பாம்பே டையிங் நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்ரீ ரமணன் ஸ்ரீ மஹாபெரியவாளிடம் அபார பக்தி கொண்டவர். ஸ்ரீ ஜோஷி என்ற பக்தரோடு இவர் ஸ்ரீ பெரியவாளை அடிக்கடி தரிசிக்க செல்வதுண்டு. ஒருமுறை நான்கைந்து பக்தர்கள் தரிசித்து நிற்க ஸ்ரீ மஹாபெரியவா அத்வைத தத்துவத்தை விளக்கும் ஒரு புத்தகத்தை அவர்களிடம் தந்து படித்துவிட்டு வருமாறு அருளினார்.  யாவரும் படித்தனர் இவரும் படித்தார். ஆனால் அந்த அத்வைத தத்துவம் யாருக்குமே விளங்கிக் கொள்ளும்படி இல்லை  பின் ஒருமுறை ஸ்ரீ ரமணன் தரிசிக்க அந்த புத்தகத்தோடு பெரியவாளிடம் நின்றார்.  "என்ன படிச்சுட்டயா புரிஞ்சுதா?" என்று ஸ்ரீ பெரியவா கேட்க ஸ்ரீ ரமணன் "முழுசா புரிஞ்சுகக முடியலையே பெரியவா" என்று பதில் உரைத்தார்.  "அப்போ அந்த புத்தகத்தை இங்கே வைச்சுட்டு போ" என்று ஸ்ரீ பெரியவா அனுப்பி வைத்தார்.  அடுத்த தரிசனம் அப்போது திரு. பிர்லா அவர்கள் ஒரு பெருந்தொகையை சமர்ப்பித்து “இதை பெரியவா ஏத்துக்கணும்” என்றார்  "எனக்கெதுக்கு... சந்திரமௌலீஸ்வரரோட பூஜையை செஞ்சுண்டிருக்காரே அவருக்கு கொண்டு கொடுக்கலாம்" என்றார். பிர்லா ஸ்ரீ புது பெரியவாளைதான் ...