Posts

Showing posts from April, 2024

மஹா பெரியவா அருளுரை

Image
 பெரியவா  சரணம்   மனசு   சுத்தமாவதற்காக,  பழைய   பாப கர்மப்  பலனைத்   தாங்கிக்    கொள்வதற்காக,  புதிய   பாபம்   செய்யாமலிருப்பதற்காக    எல்லோரும் முடிந்த   மட்டும்   தியானம்   செய்ய  வேண்டும்.   எத்தனை   நாட்கள்   ஈசுவர சரணவிந்த தியானம்    செய்கிறோமோ     அவ்வளவு நாட்களும்    நம்முடைய   பிறவிப் பயனை   நாம்   அனுபவித்தவர்களாகிறோம்.     இந்த  ஜன்மத்தை    எடுத்ததற்குப்   பலன்  அது தான்.  இதுவரை    இந்த  லோகமானது    அழுக்கை   ஏற்றிக்   கொள்வதற்கே   இடமாக    இருந்து  விட்டது.   இப்படி இருந்தது    போதும்.   இனிமேல்   இது   அழுக்கை    அலம்புகிற    இடம்    என்று  ...

ராமா ராமான்னு சொல்லு!

  "ராமா ராமான்னு சொல்லு!"  பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம் "யதோ வாசோ நிவர்தந்தே ப்ர்வர்தந்தே யந; புன; தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம" -- (எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையோ, எந்த மஹானைக் கண்டதும், பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ அந்த சந்த்ரிகாமௌளியான என் குருநாதரை நமஸ்கரிக்கிறேன்).--- ஒரு பண்டிதர்.  "பல வருஷங்களுக்கு முன்னே,காஞ்சி மஹா ஸ்வாமிகள், மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த ஆனந்ததாண்டவபுரத்தில் எழுந்தருளி இருந்தார். அப்போது, ஆந்திராவைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் மஹானை தரிசிப்பதற்காக அங்கே சென்றிருந்தார்.  அப்போது அங்கு வந்திருந்த சிறுவர்களிடம் நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்து,அதில் ராம நாமம் எழுதிக்கொண்டு மாலையில் வரும்படி சொல்லி யனுப்பினார் மஹான். அதே போல்,மாலையில் அந்தச் சிறுவர்கள் ராம நாமம் எழுதிக்கொண்டு வந்து மஹானிடம் தந்தனர்.  அங்கிருந்த சிறுவர்களில் ஒருவனைப் பார்த்து ராம நாமம் சொல்லுமாறு பணித்தார் மஹான்.  பக்கத்தில் இருந்தவர்கள் தயங்கியவாறு, "அவனால் பேசமுடியாது ஸ்வாமி"என்றனர்.  அவர்களைக் கையமர்த்தித் தடுத்த மஹான்...