மஹா பெரியவா அருளுரை



 பெரியவா  சரணம்  

மனசு   சுத்தமாவதற்காக,  பழைய   பாப கர்மப்  பலனைத்   தாங்கிக்    கொள்வதற்காக,  புதிய   பாபம்   செய்யாமலிருப்பதற்காக    எல்லோரும் முடிந்த   மட்டும்   தியானம்   செய்ய  வேண்டும்.  

எத்தனை   நாட்கள்   ஈசுவர சரணவிந்த தியானம்    செய்கிறோமோ     அவ்வளவு நாட்களும்    நம்முடைய   பிறவிப் பயனை   நாம்   அனுபவித்தவர்களாகிறோம்.     இந்த  ஜன்மத்தை    எடுத்ததற்குப்   பலன்  அது தான். 

இதுவரை    இந்த  லோகமானது    அழுக்கை   ஏற்றிக்   கொள்வதற்கே   இடமாக    இருந்து  விட்டது.   இப்படி இருந்தது    போதும்.  

இனிமேல்   இது   அழுக்கை    அலம்புகிற    இடம்    என்று   ஆக்கிக் கொள்வோம்.    தேஹம், மனசு,    சாஸ்திரம்,    க்ஷேத்திரம்,    தீர்த்தம்    முதலிய   பல    சௌகரியங்கள்     இந்த   உலகில்   தான்   இருக்கின்றன. 

நாம்   வாக்கினாலும்,    மனத்தினாலும், கை கால்    முதலியவற்றினாலும்     பாபம்   செய்து   இருக்கிறோம்.  

அந்தப்   பாபங்களையெல்லாம்    வாக்கையும்,  மனசையும்,   அவயவங்களையும்   கொண்டே    புண்ணியம்    செய்து   கரைத்து  விட  வேண்டும்.     பகவான்  இந்த   நிலையை   அடைய   நமக்குப்   படிக்கட்டு   போட்டுக்    கொடுத்திருக்கார்.  

நாம்   இந்த   உலகை விட்டுப்    போவதற்குள்    'பாப மூட்டை இல்லை'  என்று   சொல்லும் படி   செய்து   கொண்டால்   அப்புறம்   பஞ்சைப்   போல்   ஆனந்தமாகப்   பறந்து  போகலாம்.   அப்புறம்   மாறாத    ஆனந்தமாகவே    இருக்கலாம். 

நல்ல   மார்க்கத்தில்   நாம்    செல்லப்   பரமேஸ்வரன்   எல்லாருக்கும்    பூரண அநுக்கிரஹம்    புரிவானாக! 

மஹா   பெரியவா  அருளுரை

Comments

Popular

பெரியவா மகிமை

பெரியவா மகிமை