Posts

Showing posts from April, 2025

பெரியவா மகிமை

 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்   சர்வக்ஞர் ஸர்வ வ்யாபி பெரியவா! ரவி வெங்கட் ராமனின் அனுபவம் இது! ------------------------------------ சரணடைண்ந்தோரை மிக ஆபத்தான கால கட்டங்களிலும் காப்பாத்துவா பெரியவாஎன்பது சத்ய வாக்கல்லவா? சிறு வயது முதலே பெரியவாளிடம் அதீத பக்திபூண்டவர் , குடும்பம் மொத்தமுமே பெரியவாளின் பக்தியில் திளைத்தவர்கள். எந்த ஒரு காரியத்துக்கும் பெரியவா அனுமதியின்றிசெய்ததில்லை இவர் குடும்பத்தினர்! இவர் மூத்தசகோதரரை இவர் தாயார் கருவுற்றிருக்கும்போது பிரஸவத்தை எங்கே வைத்துக் கொள்வது என்பது முதற்கொண்டு அவர் ஆக்ஞையின்படிதான்அவர்கள் இயங்குவார்கள். அது போலவே நிறை மாத கர்ப்பிணியாக இவரைச் சுமந்திருந்த இவர் தாயார் இளையாத்தங்குடியில் பெரியவா குடி கொண்ட வேளையில் எங்கு  பிரஸவத்தை வைத்துக் கொள்வது என்று கேட்க திருச்சியில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவாயிற்றாம். இப்படிப்பட்ட அனுக்ரஹத்துடன் பிறந்தவர் ரவிசங்கர் என்ற ரவி வெங்கட் ராமன்! பிலானியில் பொறியியல் படித்து முடித்து வந்த சமயம் 1984 ஆம் ஆண்டு படித்து முடித்து திருச்சி திரும்பினார்....

ஸ்ரீ சிவன் சாரின் பொக்கிஷம்

 ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் பல்லக்கில் சென்ற பொழுது, திருடர்கள் எறிந்த கற்கள் அவர்களையே திருப்பி தாக்கியது பற்றி சத்குரு ஸ்ரீ சிவன் சார் தெரிவித்துள்ளார்.         சங்கீதத்தினால் ஸ்ரீ ராமனைப் போற்றிப் புகழ்ந்த மகான் தியாகய்யர்வாள் ( Thiagaraja Swamigal  1766--1847 A.D. ) ஒரு சமயம் கோவூர் சுந்தரேச முதலியாரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவருடைய வீட்டை புனிதப்படுத்தினார். தனது வீட்டில் இருந்து வழியனுப்பும் பொழுது, பல்லக்கிலேயே போக வேண்டும் என்று மகானை முதலியார் மன்றாடி வேண்டிக் கொண்டதுடன், பொன் காசுகளையும் காணிக்கையாக அளித்தார். மகான் மனமில்லாமல் பல்லக்கில் அமர்வதற்கு உட்பட்டாலும் காணிக்கையை மறுத்தார். ஆனால் கூட இருந்த பக்தர்கள் காணிக்கையை பல்லக்கில் மறைத்து வைத்து விட்டனர்.         ஓர் காட்டின் வழியாக பல்லக்கு போய்க் கொண்டிருக்கையில், சில திருடர்கள் மகானின் கோஷ்டியினரின் மீது கற்களை வீசி எறிந்தனர். ஆனால் இதே கற்கள் திரும்பி திருடர்களின் மீது தாக்கவே, திருடர்கள் மகானை அடைந்து மன்னிப்பு கோரினர். மன்னிப்பு கோரியதின் காரணத்தை திருடர்கள் அறிவித்த பிறகுத...