ஸ்ரீ சிவன் சாரின் பொக்கிஷம்
ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் பல்லக்கில் சென்ற பொழுது, திருடர்கள் எறிந்த கற்கள் அவர்களையே திருப்பி தாக்கியது பற்றி சத்குரு ஸ்ரீ சிவன் சார் தெரிவித்துள்ளார்.
சங்கீதத்தினால் ஸ்ரீ ராமனைப் போற்றிப் புகழ்ந்த மகான் தியாகய்யர்வாள் ( Thiagaraja Swamigal
1766--1847 A.D. ) ஒரு சமயம் கோவூர் சுந்தரேச முதலியாரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவருடைய வீட்டை புனிதப்படுத்தினார். தனது வீட்டில் இருந்து வழியனுப்பும் பொழுது, பல்லக்கிலேயே போக வேண்டும் என்று மகானை முதலியார் மன்றாடி வேண்டிக் கொண்டதுடன், பொன் காசுகளையும் காணிக்கையாக அளித்தார். மகான் மனமில்லாமல் பல்லக்கில் அமர்வதற்கு உட்பட்டாலும் காணிக்கையை மறுத்தார். ஆனால் கூட இருந்த பக்தர்கள் காணிக்கையை பல்லக்கில் மறைத்து வைத்து விட்டனர்.
ஓர் காட்டின் வழியாக பல்லக்கு போய்க் கொண்டிருக்கையில், சில திருடர்கள் மகானின் கோஷ்டியினரின் மீது கற்களை வீசி எறிந்தனர். ஆனால் இதே கற்கள் திரும்பி திருடர்களின் மீது தாக்கவே, திருடர்கள் மகானை அடைந்து மன்னிப்பு கோரினர். மன்னிப்பு கோரியதின் காரணத்தை திருடர்கள் அறிவித்த பிறகுதான், வீசப்பட்ட கற்கள் திருடர்களையே திருப்பித் தாக்கியதை மகான் தெரிந்து கொண்டார். தனக்குத் தெரியாமல் பொன் காசுகள் பத்திரப்படுத்தி இருந்ததை அறிந்த மகான் அதை திருடர்களுக்கே அளித்து விட்டார்.
ஆகவே, It is well known that such results are not due to any conscious volition of the saints but are due to the nature of the actions themselves என்ற வாக்கியம் தியாகய்யர்வாளின் நிலையில் உள்ளவர்களைப் போல் உள்ள மகான்களுக்குத் தோன்றிடும் சம்பவங்களுக்கே பொருத்தமாகும். வேறு விதமாகக் கூறுவோமே ஆனால் மகான்கள் எந்த விதமான ஆபத்துகளுக்கும் இலக்காகாமல் அவர்களைப் பாதுகாத்து வரும் பொறுப்பை தெய்வங்கள் ஏற்று விடுகின்றன.
------சத்குரு ஸ்ரீ சிவன் சார்
ஏணிப் படிகளில் மாந்தர்கள் !
ஸ்ரீ சிவன் சாரின் பொக்கிஷம் !
ஹரிஹரசுப்பிரமணியன்
வெங்கடசுப்பிரமணியன்
Comments
Post a Comment