Posts

பெரியவா மகிமை

 "ஓடுங்கடா! ஓடுங்கடா!"  (ஒரு கிழவர் தடியும் கையுமாக திருடனைப் பார்த்து) ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்த விசுவநாதன் என்பவருக்கு பெரியவா எப்படி அருள் செய்தாரென்று பார்க்கலாம். மனைவியோடு ஊருக்குக் கிளம்புமுன் விசுவநாதன் பூஜை அறைக்கு வந்து பெரியவா படத்தை நமஸ்கரித்துவிட்டு, "ஊரில் திருட்டு பயம் அதிகமாகி இருக்கிறது: நீங்கதான் வீட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும்!" என்று வேண்டிக் கொண்டு கிளம்பிச் சென்றார். போன சில நாட்களில், வீட்டுப் பூட்டு உடைக்கப்பட்டு, பொருள்கள் திருட்டுப் போயின!' என்று கேள்விப்பட்டு பதறிக்கொண்டு வீடு திரும்பினார். பொருளெல்லாம் சிதறிக் கிடக்கும் அலங்கோலத்தைப் பார்த்து போலீஸை வரவழைத்தார். கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மெள்ள சுதாரித்துக் கொண்டு சிதறிக் கிடந்த பொருள்களை அதனதன் இடத்தில் வைத்துவிட்டு, எவையெல்லாம் காணவில்லை என்று பட்டியல் இட்டுப் பார்த்தால் எதுவுமே திருட்டுப் போகவில்லை என்று தெரிந்தது. ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. வீடோ ஒரே களேபரமாக இருக்கு. ஆனால் எந்த சாமானையும் திருடர்கள் எடுத்துச் செல்லவே இல்லையே! என்ன நடந்தது என்று திகைத்தார்கள். அந...

பெரியவா மகிமை

 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்      ஸ்ரீ மடத்தில் நித்ய கைங்கர்யம் செய்துவரும் ஸ்ரீ மஹாபெரியவாளின் பக்தரான ஒருவர் ஸ்ரீ கோபால கனபாடிகள் என்ற பக்தர்    அவர்தம் அனுபவத்தை கூறினார்.   ஸ்ரீ கோபால கனபாடிகள் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க சென்றபோது ஒரு வேதம் சம்பந்தமான பரிட்சை பற்றி ஸ்ரீ பெரியவாளிடம் பேச நேர்ந்துள்ளது. அப்பரிட்சையில் தேர்வானால் சஷ்டிஅப்தபூர்த்தி டிரஸ்ட் என்ற ஒரு அமைப்பிலிருந்து ஒரு ஊக்கக் தொகை கிடைக்கும் என்பதை ஸ்ரீ பெரியவாளிடம் தெரிவித்தபோது “என்ன சஷ்டிஅப்தபூர்த்தி டிரஸ்ட்டா?" என்று ஸ்ரீ பெரியவா தனக்கு அதைப்பற்றி அறியாதவர்போல் கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீ கோபால கனபாடிகள் தனக்கு தெரிந்த டிரஸ்ட் விபரங்களை கூறியுள்ளார். அதாவது தெய்வமாம் ஸ்ரீ மஹாபெரியவாளின் அறுபது வருட பொற்காலத்தை விமர்சையாக கொண்டாட பக்தர்கள் ஈடுபட்டபோது, முற்றும் துறந்த மாமுனிவர் அதை ஏற்காமல் தன் எளிமையை காட்டியுள்ளார். அந்த சமயம் திரண்ட நிதியை ஒரு நற்பணிக்காக பயன்படுத்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட டிரஸ்ட் டிற்கு “சஷ்டிஅப்தபூர்த்தி டிரஸ்ட்...

பெரியவா மகிமை

     பாம்பே டையிங் நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்ரீ ரமணன் ஸ்ரீ மஹாபெரியவாளிடம் அபார பக்தி கொண்டவர். ஸ்ரீ ஜோஷி என்ற பக்தரோடு இவர் ஸ்ரீ பெரியவாளை அடிக்கடி தரிசிக்க செல்வதுண்டு. ஒருமுறை நான்கைந்து பக்தர்கள் தரிசித்து நிற்க ஸ்ரீ மஹாபெரியவா அத்வைத தத்துவத்தை விளக்கும் ஒரு புத்தகத்தை அவர்களிடம் தந்து படித்துவிட்டு வருமாறு அருளினார்.  யாவரும் படித்தனர் இவரும் படித்தார். ஆனால் அந்த அத்வைத தத்துவம் யாருக்குமே விளங்கிக் கொள்ளும்படி இல்லை  பின் ஒருமுறை ஸ்ரீ ரமணன் தரிசிக்க அந்த புத்தகத்தோடு பெரியவாளிடம் நின்றார்.  "என்ன படிச்சுட்டயா புரிஞ்சுதா?" என்று ஸ்ரீ பெரியவா கேட்க ஸ்ரீ ரமணன் "முழுசா புரிஞ்சுகக முடியலையே பெரியவா" என்று பதில் உரைத்தார்.  "அப்போ அந்த புத்தகத்தை இங்கே வைச்சுட்டு போ" என்று ஸ்ரீ பெரியவா அனுப்பி வைத்தார்.  அடுத்த தரிசனம் அப்போது திரு. பிர்லா அவர்கள் ஒரு பெருந்தொகையை சமர்ப்பித்து “இதை பெரியவா ஏத்துக்கணும்” என்றார்  "எனக்கெதுக்கு... சந்திரமௌலீஸ்வரரோட பூஜையை செஞ்சுண்டிருக்காரே அவருக்கு கொண்டு கொடுக்கலாம்" என்றார். பிர்லா ஸ்ரீ புது பெரியவாளைதான் ...

பெரியவா மகிமை

 சங்கராம்ருதம் - 1211  ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் ஏழை பணக்காரனாவது சாதனை பணக்காரன் ஏழையாவது சோதனை ஏழை ஏழையாகவே இருப்பது வேதனை  ஆனால் மஹாபெரியவாளின் இறை சாம்ராஜ்யத்தில் வேதனைகளும் சோதனைகளும் நீண்ட ஆயுளுடன் வாழ முடியாது அதற்கு திருமதி. லலிதா நரசிம்மன் ஒரு உதாரணம் பாடசாலை வெங்கட்ராம ஐயர் என்ற பெயர் காஞ்சி ஸ்ரீ  மடத்திலும் மடத்தை சேர்ந்த கைங்கர்ய மனுஷாளிடமும் மிகவும் பிரபலமான பெயர். மடத்தில் இருந்துகொண்டே மடத்திற்கும் மஹாபெரியவாளுக்கும் நன்றாக உழைத்தவர்.  எப்படி பட்ட ஒரு புண்ணியவான். பரமேஸ்வரன் கூடவே இருந்துகொண்டு நேரம் காலம் பார்க்காமல் பரமேஸ்வரனுக்கு தொண்டு செய்த புண்ணிய ஆத்மா இந்த பாடசாலை வெங்கட்ராம ஐயர். இந்த புண்ணிய ஆத்மாவின் குழைந்தைகளுள் ஒரு குழந்தை தான் லலிதா. இப்பொழுது இந்தக்குழந்தை திருமதி லலிதா நரசிம்மனாக பதவி உயர்வு பெற்று  வாழ்க்கையில் குடும்பம் என்ற உயர் நிலை வாழ்க்கைக்கு தலைவியாக இருக்கிறார். உங்களுக்கு  ஒவையார் பாடிய பாடல் ஒன்று தெரியும் என்று நினைக்கிறன். அந்தப்பாடல் இதுதான் “கொடிது கொடித...

பெரியவா மகிமை

 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்   சர்வக்ஞர் ஸர்வ வ்யாபி பெரியவா! ரவி வெங்கட் ராமனின் அனுபவம் இது! ------------------------------------ சரணடைண்ந்தோரை மிக ஆபத்தான கால கட்டங்களிலும் காப்பாத்துவா பெரியவாஎன்பது சத்ய வாக்கல்லவா? சிறு வயது முதலே பெரியவாளிடம் அதீத பக்திபூண்டவர் , குடும்பம் மொத்தமுமே பெரியவாளின் பக்தியில் திளைத்தவர்கள். எந்த ஒரு காரியத்துக்கும் பெரியவா அனுமதியின்றிசெய்ததில்லை இவர் குடும்பத்தினர்! இவர் மூத்தசகோதரரை இவர் தாயார் கருவுற்றிருக்கும்போது பிரஸவத்தை எங்கே வைத்துக் கொள்வது என்பது முதற்கொண்டு அவர் ஆக்ஞையின்படிதான்அவர்கள் இயங்குவார்கள். அது போலவே நிறை மாத கர்ப்பிணியாக இவரைச் சுமந்திருந்த இவர் தாயார் இளையாத்தங்குடியில் பெரியவா குடி கொண்ட வேளையில் எங்கு  பிரஸவத்தை வைத்துக் கொள்வது என்று கேட்க திருச்சியில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவாயிற்றாம். இப்படிப்பட்ட அனுக்ரஹத்துடன் பிறந்தவர் ரவிசங்கர் என்ற ரவி வெங்கட் ராமன்! பிலானியில் பொறியியல் படித்து முடித்து வந்த சமயம் 1984 ஆம் ஆண்டு படித்து முடித்து திருச்சி திரும்பினார்....

ஸ்ரீ சிவன் சாரின் பொக்கிஷம்

 ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் பல்லக்கில் சென்ற பொழுது, திருடர்கள் எறிந்த கற்கள் அவர்களையே திருப்பி தாக்கியது பற்றி சத்குரு ஸ்ரீ சிவன் சார் தெரிவித்துள்ளார்.         சங்கீதத்தினால் ஸ்ரீ ராமனைப் போற்றிப் புகழ்ந்த மகான் தியாகய்யர்வாள் ( Thiagaraja Swamigal  1766--1847 A.D. ) ஒரு சமயம் கோவூர் சுந்தரேச முதலியாரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவருடைய வீட்டை புனிதப்படுத்தினார். தனது வீட்டில் இருந்து வழியனுப்பும் பொழுது, பல்லக்கிலேயே போக வேண்டும் என்று மகானை முதலியார் மன்றாடி வேண்டிக் கொண்டதுடன், பொன் காசுகளையும் காணிக்கையாக அளித்தார். மகான் மனமில்லாமல் பல்லக்கில் அமர்வதற்கு உட்பட்டாலும் காணிக்கையை மறுத்தார். ஆனால் கூட இருந்த பக்தர்கள் காணிக்கையை பல்லக்கில் மறைத்து வைத்து விட்டனர்.         ஓர் காட்டின் வழியாக பல்லக்கு போய்க் கொண்டிருக்கையில், சில திருடர்கள் மகானின் கோஷ்டியினரின் மீது கற்களை வீசி எறிந்தனர். ஆனால் இதே கற்கள் திரும்பி திருடர்களின் மீது தாக்கவே, திருடர்கள் மகானை அடைந்து மன்னிப்பு கோரினர். மன்னிப்பு கோரியதின் காரணத்தை திருடர்கள் அறிவித்த பிறகுத...

பெரியவா மகிமை

 பல வர்ஷங்களுக்கு முன்னால், உபன்யாஸ சக்ரவர்த்தி சேங்காலிபுரம் ஶ்ரீ அனந்தராம தீக்ஷதர், ஶ்ரீமடத்தில் இருந்தபோது, நடந்த மெய்சிலிர்க்க வைக்கும் ஸம்பவம். ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஶ்ரீமடத்தில் ஸுவாஸினி பூஜைக்கு ஏற்பாடாகியிருந்தது. ஸாக்ஷாத் பெரியவாளே அங்கே அமர்ந்திருக்க, பல ஊர்களிலிருந்து ஏகப்பட்ட ஸுமங்கலிகள் வந்திருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இவர்களிடையே ஒரு பெண்மணி மட்டும் சற்று வித்யாஸமாக இருந்தாள். ஸுமார் நாற்பது, நாற்பத்தஞ்சு வயஸிருக்கும். வைதவ்ய கோலமாக, நெற்றியில் குங்குமம் இல்லை. தலையில் பூ இல்லை. அவளைப் பார்த்தவர்களுக்கோ, ஒருவேளை குங்குமம் இட்டுக்கொள்ள மறந்துவிட்டாளோ! என்ற ஸந்தேஹம். ஒரு பெண் அவளிடம் குங்கும சிமிழை நீட்டியதும், ஏதோ பார்க்கக் கூடாததை பார்த்த மாதிரி, ஒதுங்கி ஓடினாள். பெரியவாளின் கருணாகடாக்ஷம் இவளை தப்பிக்க விடுமா? அவளை கூப்பிட்டார். தயங்கி தயங்கி அந்த தெய்வத்தின் முன் நின்ற போது, அந்தப் பெண்ணுக்கு அழுகைதான் பொத்துக்கொண்டு வந்தது. “அழாத!…. ஸுவாஸினி பூஜை நடக்கற எடத்ல குங்குமம் இல்லாம மூளி நெத்தியோட நிக்கறியே! இது பகவத் ஸன்னதி. எத்தன  ஸுவாஸினி வந்திருக்கா...