Posts

பெரியவா மகிமை

 கருணை தெய்வமாம் ஈஸ்வரரே ஒரு சாதாரண சந்யாச திருக்கோலம் கொண்டு, உயரியமேன்மை நிலையாம் சுகபிரம்மரிஷி அவர்களின் லக்ஷணங்களோடும் திகழ்ந்து நம்மிடையே அந்த அபூர்வ உயர்நிலையை மறைத்த எளிமையோடு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளாய் அருள்பொழிந்துள்ளார். ஸ்ரீ சுந்தரராமன் அவர்களுக்கு ஸ்ரீ மஹாபெரியவாளிடம் ஏற்பட்ட அபூர்வமான அனுபவங்கள் ஏராளம் ஸ்ரீ பெரியவா வலியவந்து அருளி அவருக்கு படித்து பட்டம் பெற எல்லா ஏற்பாடுகளையும் தந்தையின் மேலான அக்கறையுடனும் கருணையோடும் அனுக்ரஹத்துள்ளார். 1960-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் அவர் பி.எஸ்.ஸி. ஹானர்ஸ் பரிட்சைகளை எழுதிவிட்டு திருச்சியில் ஸ்ரீ பெரியவாளுக்கு இரண்டு மாதங்களாக கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். திருச்சிராபள்ளி நேஷனல் உயர்நிலை பள்ளியில் ஸ்ரீ பெரியவா அருளிக்கொண்டிருந்தார் ஒரு நாள் காலை பள்ளியின் எதிரே இருந்த பார்பர்ஷாப்பிற்கு சுந்தரராமன் சென்றார். முடிதிருத்திக் கொள்ள உட்கார்ந்தார். எப்போதுமே இப்படிப்பட்ட சமயங்களில் எல்லா நாவிதர்களும் தன் வேலையோடு ஏதாவது அரட்டை அடித்துக் கொண்டே தொழில் செய்வார்கள். அவர்களுக்கு அரசியலைப்பற்றியோ, அரசியல்வாதிகளைப்பற்றியோ, சினிமா நடிகர்கள...

பெரியவா மகிமை

 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா காருண்ய தெய்வமல்லவா? இதனால்தானோ என்னவோ அடைக்கலம் தேடி ஸ்ரீமகானிடம் வருபவர்கள் ஏராளம். தன் துன்பங்களை உணரக் கூடிய பக்தர்களையின்றி அதில் தான் யார் என்பதை அறிந்து கொள்ளும் புத்திசுவாதீனமற்றவர்களும் அடங்கும். புத்தி பேதலித்து பித்தர்களாக இப்படி அவ்வப்போது ஸ்ரீமடத்திற்கு வருவதும் இரண்டு மூன்று நாட்கள் தங்குவதும் நடப்பதுண்டு. ஆனால் இந்தப் பித்தனோ வந்து பத்து பதினைந்து நாட்கள் கடந்துவிட்டன. யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. என்றாலும் தன் தலையில் மண்ணைவாரி இறைத்துக் கொள்வதும் எதையாவது சொல்லிக் கொடுத்தால் அதை அப்படியே சொல்வதுமாக அந்த பித்தன் அங்கிருந்தவர்களுக்கு கொஞ்சம் இடைஞ்சலாக சேஷ்டைகள் செய்துக் கொண்டிருந்தான்.இந்த பித்தனை விரட்டி விடலாமென்று ஸ்ரீபெரியவாளிடம் முறையிட்டனர். சாப்பிட்டாலும் அளவுக்கு மீறி அதிகமாக சாப்பிடும் இவன் அங்கே பிரச்சனையாகத்தான் தெரிந்தான்.ஆனால் ஸ்ரீபெரியவாளோ, இருந்துட்டு போகட்டுமே அவன் யாரையும் தொந்திரவு பண்றதில்லயே, என்று தன் கருணையை வெளிப்படுத...

பெரியவா மகிமை

 "ஓடுங்கடா! ஓடுங்கடா!"  (ஒரு கிழவர் தடியும் கையுமாக திருடனைப் பார்த்து) ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்த விசுவநாதன் என்பவருக்கு பெரியவா எப்படி அருள் செய்தாரென்று பார்க்கலாம். மனைவியோடு ஊருக்குக் கிளம்புமுன் விசுவநாதன் பூஜை அறைக்கு வந்து பெரியவா படத்தை நமஸ்கரித்துவிட்டு, "ஊரில் திருட்டு பயம் அதிகமாகி இருக்கிறது: நீங்கதான் வீட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும்!" என்று வேண்டிக் கொண்டு கிளம்பிச் சென்றார். போன சில நாட்களில், வீட்டுப் பூட்டு உடைக்கப்பட்டு, பொருள்கள் திருட்டுப் போயின!' என்று கேள்விப்பட்டு பதறிக்கொண்டு வீடு திரும்பினார். பொருளெல்லாம் சிதறிக் கிடக்கும் அலங்கோலத்தைப் பார்த்து போலீஸை வரவழைத்தார். கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மெள்ள சுதாரித்துக் கொண்டு சிதறிக் கிடந்த பொருள்களை அதனதன் இடத்தில் வைத்துவிட்டு, எவையெல்லாம் காணவில்லை என்று பட்டியல் இட்டுப் பார்த்தால் எதுவுமே திருட்டுப் போகவில்லை என்று தெரிந்தது. ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. வீடோ ஒரே களேபரமாக இருக்கு. ஆனால் எந்த சாமானையும் திருடர்கள் எடுத்துச் செல்லவே இல்லையே! என்ன நடந்தது என்று திகைத்தார்கள். அந...

பெரியவா மகிமை

 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்      ஸ்ரீ மடத்தில் நித்ய கைங்கர்யம் செய்துவரும் ஸ்ரீ மஹாபெரியவாளின் பக்தரான ஒருவர் ஸ்ரீ கோபால கனபாடிகள் என்ற பக்தர்    அவர்தம் அனுபவத்தை கூறினார்.   ஸ்ரீ கோபால கனபாடிகள் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க சென்றபோது ஒரு வேதம் சம்பந்தமான பரிட்சை பற்றி ஸ்ரீ பெரியவாளிடம் பேச நேர்ந்துள்ளது. அப்பரிட்சையில் தேர்வானால் சஷ்டிஅப்தபூர்த்தி டிரஸ்ட் என்ற ஒரு அமைப்பிலிருந்து ஒரு ஊக்கக் தொகை கிடைக்கும் என்பதை ஸ்ரீ பெரியவாளிடம் தெரிவித்தபோது “என்ன சஷ்டிஅப்தபூர்த்தி டிரஸ்ட்டா?" என்று ஸ்ரீ பெரியவா தனக்கு அதைப்பற்றி அறியாதவர்போல் கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீ கோபால கனபாடிகள் தனக்கு தெரிந்த டிரஸ்ட் விபரங்களை கூறியுள்ளார். அதாவது தெய்வமாம் ஸ்ரீ மஹாபெரியவாளின் அறுபது வருட பொற்காலத்தை விமர்சையாக கொண்டாட பக்தர்கள் ஈடுபட்டபோது, முற்றும் துறந்த மாமுனிவர் அதை ஏற்காமல் தன் எளிமையை காட்டியுள்ளார். அந்த சமயம் திரண்ட நிதியை ஒரு நற்பணிக்காக பயன்படுத்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட டிரஸ்ட் டிற்கு “சஷ்டிஅப்தபூர்த்தி டிரஸ்ட்...

பெரியவா மகிமை

     பாம்பே டையிங் நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்ரீ ரமணன் ஸ்ரீ மஹாபெரியவாளிடம் அபார பக்தி கொண்டவர். ஸ்ரீ ஜோஷி என்ற பக்தரோடு இவர் ஸ்ரீ பெரியவாளை அடிக்கடி தரிசிக்க செல்வதுண்டு. ஒருமுறை நான்கைந்து பக்தர்கள் தரிசித்து நிற்க ஸ்ரீ மஹாபெரியவா அத்வைத தத்துவத்தை விளக்கும் ஒரு புத்தகத்தை அவர்களிடம் தந்து படித்துவிட்டு வருமாறு அருளினார்.  யாவரும் படித்தனர் இவரும் படித்தார். ஆனால் அந்த அத்வைத தத்துவம் யாருக்குமே விளங்கிக் கொள்ளும்படி இல்லை  பின் ஒருமுறை ஸ்ரீ ரமணன் தரிசிக்க அந்த புத்தகத்தோடு பெரியவாளிடம் நின்றார்.  "என்ன படிச்சுட்டயா புரிஞ்சுதா?" என்று ஸ்ரீ பெரியவா கேட்க ஸ்ரீ ரமணன் "முழுசா புரிஞ்சுகக முடியலையே பெரியவா" என்று பதில் உரைத்தார்.  "அப்போ அந்த புத்தகத்தை இங்கே வைச்சுட்டு போ" என்று ஸ்ரீ பெரியவா அனுப்பி வைத்தார்.  அடுத்த தரிசனம் அப்போது திரு. பிர்லா அவர்கள் ஒரு பெருந்தொகையை சமர்ப்பித்து “இதை பெரியவா ஏத்துக்கணும்” என்றார்  "எனக்கெதுக்கு... சந்திரமௌலீஸ்வரரோட பூஜையை செஞ்சுண்டிருக்காரே அவருக்கு கொண்டு கொடுக்கலாம்" என்றார். பிர்லா ஸ்ரீ புது பெரியவாளைதான் ...

பெரியவா மகிமை

 சங்கராம்ருதம் - 1211  ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் ஏழை பணக்காரனாவது சாதனை பணக்காரன் ஏழையாவது சோதனை ஏழை ஏழையாகவே இருப்பது வேதனை  ஆனால் மஹாபெரியவாளின் இறை சாம்ராஜ்யத்தில் வேதனைகளும் சோதனைகளும் நீண்ட ஆயுளுடன் வாழ முடியாது அதற்கு திருமதி. லலிதா நரசிம்மன் ஒரு உதாரணம் பாடசாலை வெங்கட்ராம ஐயர் என்ற பெயர் காஞ்சி ஸ்ரீ  மடத்திலும் மடத்தை சேர்ந்த கைங்கர்ய மனுஷாளிடமும் மிகவும் பிரபலமான பெயர். மடத்தில் இருந்துகொண்டே மடத்திற்கும் மஹாபெரியவாளுக்கும் நன்றாக உழைத்தவர்.  எப்படி பட்ட ஒரு புண்ணியவான். பரமேஸ்வரன் கூடவே இருந்துகொண்டு நேரம் காலம் பார்க்காமல் பரமேஸ்வரனுக்கு தொண்டு செய்த புண்ணிய ஆத்மா இந்த பாடசாலை வெங்கட்ராம ஐயர். இந்த புண்ணிய ஆத்மாவின் குழைந்தைகளுள் ஒரு குழந்தை தான் லலிதா. இப்பொழுது இந்தக்குழந்தை திருமதி லலிதா நரசிம்மனாக பதவி உயர்வு பெற்று  வாழ்க்கையில் குடும்பம் என்ற உயர் நிலை வாழ்க்கைக்கு தலைவியாக இருக்கிறார். உங்களுக்கு  ஒவையார் பாடிய பாடல் ஒன்று தெரியும் என்று நினைக்கிறன். அந்தப்பாடல் இதுதான் “கொடிது கொடித...

பெரியவா மகிமை

 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்   சர்வக்ஞர் ஸர்வ வ்யாபி பெரியவா! ரவி வெங்கட் ராமனின் அனுபவம் இது! ------------------------------------ சரணடைண்ந்தோரை மிக ஆபத்தான கால கட்டங்களிலும் காப்பாத்துவா பெரியவாஎன்பது சத்ய வாக்கல்லவா? சிறு வயது முதலே பெரியவாளிடம் அதீத பக்திபூண்டவர் , குடும்பம் மொத்தமுமே பெரியவாளின் பக்தியில் திளைத்தவர்கள். எந்த ஒரு காரியத்துக்கும் பெரியவா அனுமதியின்றிசெய்ததில்லை இவர் குடும்பத்தினர்! இவர் மூத்தசகோதரரை இவர் தாயார் கருவுற்றிருக்கும்போது பிரஸவத்தை எங்கே வைத்துக் கொள்வது என்பது முதற்கொண்டு அவர் ஆக்ஞையின்படிதான்அவர்கள் இயங்குவார்கள். அது போலவே நிறை மாத கர்ப்பிணியாக இவரைச் சுமந்திருந்த இவர் தாயார் இளையாத்தங்குடியில் பெரியவா குடி கொண்ட வேளையில் எங்கு  பிரஸவத்தை வைத்துக் கொள்வது என்று கேட்க திருச்சியில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவாயிற்றாம். இப்படிப்பட்ட அனுக்ரஹத்துடன் பிறந்தவர் ரவிசங்கர் என்ற ரவி வெங்கட் ராமன்! பிலானியில் பொறியியல் படித்து முடித்து வந்த சமயம் 1984 ஆம் ஆண்டு படித்து முடித்து திருச்சி திரும்பினார்....