சங்கராம்ருதம் - 878 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் ஸ்ரீ பெரியவாள் ஓரிக்கையில் இருந்தபோது, ஒரு வெள்ளைக்காரர் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். அவர் டெல்லியிலிருந்து மும்பை போவதற்குப் பிளேனில் டிக்கெட் கேட்டார். கிடைக்கவில்லை. உடனே சென்னைக்குச் செல்லும் விமானத்தைப் பிடித்தார் .மீனம்பாக்கம் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும், 'எங்கே போவது' என்று கேள்விக்குறி எழுந்தது. அங்கிருந்த டாக்ஸி டிரைவரிடம், "இங்கு யாராவது ரிலீஜியஸ் லீடர் (மதத் தலைவர்) இருக்கிறாரா?" என்று கேட்டார். "காஞ்சிபுரத்தில் சங்கராசார்ய ஸ்வாமிகள் இருக்கிறார்" என்று பதில் வந்தது. "உடனே என்னைக் காஞ்சிபுரத்தில் கொண்டு போய் விடு" என்று சொன்ன வெள்ளைக்காரர் காரிலேயே காஞ்சிபுரம் வந்துவிட்டார். ஸ்ரீ பெரியவாள் அந்தச் சமயம் ஓரிக்கை என்ற இடத்தில் ஒரு கீத்துக் கொட்டகையில் - பிட்சை செய்து விட்டு விச்ராந்தி பண்ணிக் கொண்டு இருந்தார்கள். அந்த வெளிநாட்டுக்காரர் ஸ்ரீ பெரியவாளைப் பார்க்க ரொம்ப ஆவலாய் இருந்தார். நாங்கள் அவரி...
Posts
Showing posts from May, 2024
- Get link
- X
- Other Apps
By
CAMPUS - CBE
-
"மஹாபெரியவா அருளிருந்தால், அவர் முன் நீ ஆடும் பாக்யம் உனக்குக் கிடைக்கும். நீ ஆடுவதற்கு நான் பாடும் பாக்யமும் எனக்குக் கிடைக்கும்”. வருஷம்: 1956, மாதம்: ஜனவரி இரண்டு இளைஞர்கள் - ஆங்கிலக் கல்வியுடன் நாட்டியக் கலையையும், கர்நாடக இசையையும் கசடறக் கற்றவர்கள். ஒருவர் பரத நாட்டியத்திலும், மற்றவர் கர்நாடக இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். பல்கலைக்கழக மேற்படிப்பு படித்து முடித்ததும், படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் வரை, சென்னையிலிருக்கும் தங்கள் நாட்டியக் கலா நிலையத்தில் தங்கி இருந்தனர். அங்கு பாடங்கள் நடத்துவதில் உதவியாக இருந்துகொண்டு, எதிர்காலத்தைக் குறித்த கவலையுடன், நாட்களை நடனமும் கர்நாடக இசையும் பயில்வதிலும், கற்றுக் கொடுப்பதிலும் கழித்துக் கொண்டிருந்தனர். இவ்விருவரில் ஒரு இளைஞர் வேதவித்தகரின் மகன். சிறுவயதிலிருந்தே மஹாபெரியவா மீது மரியாதையும் பக்தியும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு நாள் காலை, “புறப்படு நண்பா... நாம் இருவரும் காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவாளை தரிசித்து வருவோம். அவருக்குப் பாடலில் உள்ள அளவுக்கு ஆடலில் அவ்வளவு விருப்பம் உண்டா என்று எ...