Posts

Showing posts from December, 2024

கிறிஸ்துவ பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, விபூதிக்குப் பதில் வாழைப்பழங்கள் பிரசாதமாக கொடுத்த சம்பவம்.

 இன்று கிறிஸ்துமஸ் நாளை முன்னிட்டு,... கிறிஸ்துவ பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, விபூதிக்குப் பதில் வாழைப்பழங்கள் பிரசாதமாக கொடுத்த சம்பவம்.                                                                                                                                                                  கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன். பிக்ஷாவந்தனம் செய்ய வந்தார் ஓர் அன்பர். கும்பகோணம் பக்கம்,அவருடைய கிராமம். சொந்தமாக வாழைத் தோட்டம் உண்டு. ஏராளமான கறிகாய்களுடன், நான்கு தார் வாழைப்பழங்களையும் கொண்டு வந்தார். பெரிய பெரிய சீப்புகள்....

தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

 தினம்ஒரு(தெய்வத்தின்)குரல் அம்பாளைப் பிரகிருதி, மாயை என்று சொன்னதோடு நிற்கவில்லை. புருஷன் அல்லது மாயையின் சக்தியும் இதே காமாக்ஷிதான். அவனோடு அபேதமாக, அபின்னமாக இருக்கப்பட்ட வஸ்து இவள். இருவரும் ஒன்றே; அத்வைதமாக இருக்கிறார்கள். வேதங்களின் பரம தாத்பரியம் அத்வைதம். அந்த அத்வைதத்தின் ரூபமாகவே காஞ்சிபுரத்தில் காமாக்ஷி பிரகாசிக்கிறாளாம்! ‘ஐதம்பரியம் சகாஸ்தி நிகமானாம்’ என்கிறார் மூகர். மாதா ஸ்வரூபம் என்று அருகில் போகிறோம். பார்த்தால் பிதாவுக்கு உண்டான நெற்றிக்கண், சந்திரகலை எல்லாமும் இங்கே இருக்கின்றன. சிறந்த பதிவிரதையாக இருந்து, அந்தப் பதிவிரத்தியத்தாலேயே ஈசுவரனின் பாதி சரீரத்தை இவள் பெற்றதாகச் சொன்னாலும், இப்போது பார்க்கும் போது, இவள் சிவஸ்ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி, முழுவதும் தானே ஆகிவிட்டாள் என்று, ஸெளந்தர்ய லஹரி சொல்கிறது. பக்தியின் ஸ்வாதீனமும், கவித்த கல்பனா சுதந்திரமும் கொண்டு இப்படியெல்லாம் ஆசார்யாள், மூகர் போன்றவர்கள் துதிக்கிறார்கள். மொத்தத்தில் தாத்பரியம் அவள் பூரண பிரம்மசக்தி, அவளுக்கும் பரமாத்மாவான பரமேசுவரனுக்கும் லவலேசம்கூட பேதம் இல்லை என்பதே. பரமேசுவரனின் சரீரத்தை ...