பெரியவா மகிமை
''இந்தப் பாத்திரமெல்லாம் என்ன வழவழப்பா நன்னா இருக்கு?''*- பெரியவா. 1971ஆம் வருஷம் பெரியவா காஞ்சியிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக கார்வேட் நகரத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். அதற்கு முன்பு அத்திமாஞ்சேரி என்ற கிராமம். அங்கு சில நாள் தங்கினார்கள். நான் பெரியவாளை நமஸ்கரித்து, பொதட்டூர் கிராமத்துக்கு வருகை புரியுமாறு விக்ஞாபனம் முன் வைத்தேன். ''நீ என்னை அழைத்துப் போகிறாயா? இன்றிரவு இங்கு தங்கி நாளை என்னை அழைத்துப் போ'' என்றார். நானே பெரியவாளை மிகுந்த தயக்கத்துடந்தான் அழைப்பு விடுத்தேன். ஏனெனில் நேரடியான பாதை இல்லாததால் சுற்றி வளைத்துப் போகவேண்டும். அதனால் பத்து மைல் அதிகமாகும். அத்துடன் பெரியவாளுக்கு ரொம்ப சிரமமாக இருக்கும். அங்கிருந்தவர்களுக்கு என்னிடம் மிகுந்த வருத்தம். பெரியவாளை இப்படி சிரமப்படுத்த வேண்டுமா? என்று. ஆனால் பெரியவா பிடிவாதமாக என்னுடன் புறப்பட்டுவிட்டார். போகும் வழியில் ''உனக்குத் தெரியுமா? நான் மடத்துப் பொறுப்பிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டேன். இப்போது மடத்தில் இரண்டு பாராக்களும், இந்த ரிக்க்ஷாவும் கொடுத்திருக்கிறார்க...