பெரியவா மகிமை
சங்கராம்ருதம் - 1211 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் ஏழை பணக்காரனாவது சாதனை பணக்காரன் ஏழையாவது சோதனை ஏழை ஏழையாகவே இருப்பது வேதனை ஆனால் மஹாபெரியவாளின் இறை சாம்ராஜ்யத்தில் வேதனைகளும் சோதனைகளும் நீண்ட ஆயுளுடன் வாழ முடியாது அதற்கு திருமதி. லலிதா நரசிம்மன் ஒரு உதாரணம் பாடசாலை வெங்கட்ராம ஐயர் என்ற பெயர் காஞ்சி ஸ்ரீ மடத்திலும் மடத்தை சேர்ந்த கைங்கர்ய மனுஷாளிடமும் மிகவும் பிரபலமான பெயர். மடத்தில் இருந்துகொண்டே மடத்திற்கும் மஹாபெரியவாளுக்கும் நன்றாக உழைத்தவர். எப்படி பட்ட ஒரு புண்ணியவான். பரமேஸ்வரன் கூடவே இருந்துகொண்டு நேரம் காலம் பார்க்காமல் பரமேஸ்வரனுக்கு தொண்டு செய்த புண்ணிய ஆத்மா இந்த பாடசாலை வெங்கட்ராம ஐயர். இந்த புண்ணிய ஆத்மாவின் குழைந்தைகளுள் ஒரு குழந்தை தான் லலிதா. இப்பொழுது இந்தக்குழந்தை திருமதி லலிதா நரசிம்மனாக பதவி உயர்வு பெற்று வாழ்க்கையில் குடும்பம் என்ற உயர் நிலை வாழ்க்கைக்கு தலைவியாக இருக்கிறார். உங்களுக்கு ஒவையார் பாடிய பாடல் ஒன்று தெரியும் என்று நினைக்கிறன். அந்தப்பாடல் இதுதான் “கொடிது கொடித...