குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா - பாடலின் சந்தத்தில் பெரியவாளுக்கு ஒரு பாமலர்👇
குறை ஒன்றும் இல்லை காமகோடி சங்கரா
குறை ஒன்றும் இல்லை சங்கரா
குறை ஒன்றும் இல்லை குருநாதா
குறை ஒன்றும் இல்லை காமகோடி சங்கரா
குறை ஒன்றும் இல்லை சங்கரா
குறை ஒன்றும் இல்லை குருநாதா
தூலமாய் இல்லாமல் மறைந்தாய் சங்கரா
தூயவனே அப்போதும் அருள்கின்றாய் எனக்கு
குறை ஒன்றும் இல்லை காமகோடி சங்கரா
கருணையின் ரூபமாய் காஞ்சிமுனி நீயிருக்க
கவலைகள் ஏதுமில்லை காமகோடி சங்கரா
சர்வேசா சிவரூபா குருநாதா குருநாதா.
மனத்துள்ளே உறைகின்றாய் சங்கரா - குருவே
மனத்துள்ளே உறைகின்றாய் சங்கரா - உன்னை
மறவாமல் நாளுமே உளத்திலே கண்டேன்
மனத்துள்ளே உறைகின்றாய் சங்கரா - உன்னை
மறவாமல் நாளுமே உளத்திலே கண்டேன்
- அதனாலே
குறை ஒன்றும் எனக்கில்லை சங்கரா
அதனாலே
குறை ஒன்றும் எனக்கில்லை சங்கரா
காருண்ய மூர்த்தியாய் இருக்கின்ற மகேசா
காருண்ய மூர்த்தியாய் இருக்கின்ற மகேசா
குறை ஒன்றும் இல்லை காமகோடி சங்கரா
குறை ஒன்றும் இல்லை காமகோடி சங்கரா
சர்வேசா சிவரூபா குருநாதா குருநாதா.
பாமரர்க்கிரங்கி பாரிலே பிறந்து
காமகோடி பீடமதில் நிறைந்தாய் ஈஸ்வரா
பாமரர்க்கிரங்கி பாரிலே பிறந்து
காமகோடி பீடமதில் நிறைந்தாய் ஈஸ்வரா
குறை ஒன்றும் இல்லை காமகோடி சங்கரா
என்றும் எனைக்காக்கும் என்னப்பா
என்றும் எனைக்காக்கும் என்னப்பா - உன்விழியில்
யாவும் தரவல்ல ஒளிர்ந்திடும் அருட்பார்வை
எப்போதும் இருந்திட ஏது குறை எனக்கு
எப்போதும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை காமகோடி சங்கரா
ஒன்றும் குறையில்லை காமகோடி சங்கரா
சர்வேசா சிவரூபா குருநாதா குருநாதா
குருநாதா குருநாதா குருநாதா குருநாதா
சரணம் சரணம் சந்திரசேகரா
சரணம் சரணம் சத்குருவே
Comments
Post a Comment